Screen Reader Access     A-AA+
அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம் - 630611, சிவகங்கை .
Arulmigu Adaikalamkatha Iyanar And Bathirakaliamman Temple, Madapuram - 630611, Sivagangai District [TM035703]
×
Temple History

தல வரலாறு

புராணத்தின்படி 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் கெளரி தாயாருடன் திருப்புவனம் ஸ்தலத்திற்கு வேட்டையாட வந்தனர். அப்போது இவ்வூர் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, காடு வெகு தொலைவில் பரந்து விரிந்து உள்ளது. உன்னால் வேட்டைக்கு வர இயலாது. ஆகவே நீ இங்கே இரு எனக் கூறினார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானைப் பார்த்து நான் எப்படித் தனிமையில் இருப்பது? எனக் கேட்க சிவபெருமான் பார்வதிதேவிக்குத் துணையாக அய்யனார் என்ற மகனை உருவகம் செய்து வைத்துவிட்டு வேட்டையாடச் செல்கிறார். அப்போது பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து நான் இங்கே இருப்பதால் இந்தத் தலத்துக்குச் சிறப்பு நிலை கொடுக்க வேண்டும் எனப் பார்வதிதேவி கேட்க, சிவபெருமான் இத்திருத்தலத்திலிருந்து...